Categories: தமிழகம்

புதுக்கோட்டை சுகாதாரத்துறை இணை இயக்குனர் பணியிடை நீக்கம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு!!

புதுக்கோட்டை புது குளம் அருகே உள்ள நகர் நல மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அங்கு பணியாற்றும் மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் நோயாளிகளுக்கு வரும் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா பாலசுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்அரசு மருத்துவமனையில் நான் ஆய்வு செய்தேன்.

அங்கு தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் மனநல காப்பகத்தில் பராமரிப்பில் உள்ள 59 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காததோடு அவர்களுக்கு உணவும் சரிவர வழங்கவில்லை என்ற விஷயம் ஆய்வில் தெரிய வந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை அடுத்து தனியார் தொண்டு நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்தும் அவ்வப்போது மனநிலை காப்பகத்தை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும் ஆனால் அந்த பணியை அவர் சரிவர செய்யாதது தெரியவந்தது.

மாவட்ட மருத்துவமனை மற்றும் சுகாதார துறை இணை இயக்குனர ராமுவை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அன்னவாசல் மருத்துவமனை மருத்துவர சரவணன் பணியிட மாற்றம் செய்தும் உத்திரவிடப்பட்டுள்ளது.

அந்த மனநல காப்பகத்தில் உள்ள 59 பேரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று சுகாதாரத் துறை இயக்குனர் முகாமிட்டு அந்த பணியில் ஈடுபடுவார்

இயக்குனர் இரண்டு நாட்கள் இங்கேயே தங்கியிருந்து மாவட்டத்தில் உள்ள மற்ற மனநல காப்பகங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கையை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள தமிழகத்தில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம்தேர்வுகள் நடைபெற்று வருகிறது விரைவில் பணியிடங்கள் நிரப்பப்படும்.

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவரை ஸ்ட்ரக்சர் வசதி இல்லாததால் நான்கு பேர் தூக்கிக்கொண்டு செல்லும் சம்பவம் வலைதளங்களில் வைரலாக வந்ததை தொடர்ந்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது போதிய ஸ்ட்ரக்சர் வசதி இருந்தும் இது போன்ற சம்பவம் நடைபெற்று வருவது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

5 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

7 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

8 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

9 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

9 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

10 hours ago

This website uses cookies.