Categories: தமிழகம்

புதுக்கோட்டை சுகாதாரத்துறை இணை இயக்குனர் பணியிடை நீக்கம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு!!

புதுக்கோட்டை புது குளம் அருகே உள்ள நகர் நல மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அங்கு பணியாற்றும் மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் நோயாளிகளுக்கு வரும் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா பாலசுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்அரசு மருத்துவமனையில் நான் ஆய்வு செய்தேன்.

அங்கு தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் மனநல காப்பகத்தில் பராமரிப்பில் உள்ள 59 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காததோடு அவர்களுக்கு உணவும் சரிவர வழங்கவில்லை என்ற விஷயம் ஆய்வில் தெரிய வந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை அடுத்து தனியார் தொண்டு நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்தும் அவ்வப்போது மனநிலை காப்பகத்தை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும் ஆனால் அந்த பணியை அவர் சரிவர செய்யாதது தெரியவந்தது.

மாவட்ட மருத்துவமனை மற்றும் சுகாதார துறை இணை இயக்குனர ராமுவை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அன்னவாசல் மருத்துவமனை மருத்துவர சரவணன் பணியிட மாற்றம் செய்தும் உத்திரவிடப்பட்டுள்ளது.

அந்த மனநல காப்பகத்தில் உள்ள 59 பேரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று சுகாதாரத் துறை இயக்குனர் முகாமிட்டு அந்த பணியில் ஈடுபடுவார்

இயக்குனர் இரண்டு நாட்கள் இங்கேயே தங்கியிருந்து மாவட்டத்தில் உள்ள மற்ற மனநல காப்பகங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கையை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள தமிழகத்தில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம்தேர்வுகள் நடைபெற்று வருகிறது விரைவில் பணியிடங்கள் நிரப்பப்படும்.

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவரை ஸ்ட்ரக்சர் வசதி இல்லாததால் நான்கு பேர் தூக்கிக்கொண்டு செல்லும் சம்பவம் வலைதளங்களில் வைரலாக வந்ததை தொடர்ந்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது போதிய ஸ்ட்ரக்சர் வசதி இருந்தும் இது போன்ற சம்பவம் நடைபெற்று வருவது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரஜினியோட அந்த வீடீயோவை ரிலீஸ் பண்ணுங்க..எல்லோரும் பார்க்கட்டும்..ரம்யா கிருஷ்ணன் பர பர பேச்சு.!

ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…

6 hours ago

IPL போட்டியில் சில உடைகளுக்கு தடை விதித்த பிசிசிஐ..குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடு.!

பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…

7 hours ago

என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!

பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…

8 hours ago

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது.. “போலி போட்டோஷூட் அப்பா”வுக்கு பட்டியல் போட்ட இபிஎஸ்!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…

8 hours ago

இனி தமிழ் மொழியை சொல்லி திமுக வியாபாரம் செய்ய முடியாது : ஹெச் ராஜா தாக்கு!

திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…

8 hours ago

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!

பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…

9 hours ago

This website uses cookies.