புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட சாந்தநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ்(36) உள்ளிட்ட 12 பேரை போதைப் பொருள் தடுப்பு காவல் துறையினர் போதை ஊசி செலுத்தியதற்காக விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
முதலில் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் பின்னர் அவர்களை வெள்ளனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது விக்னேஷ்க்கு பல்ஸ் குறைந்து உயிரிழந்துள்ளார். பின்னர் நள்ளிரவு ஒரு மணிக்கு விக்னேஷின் குடும்பத்தாரை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விக்னேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததாக விக்னேஷ் குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்க: அட்ராசக்க… தங்கம் விலை சரிவு : இதுதான் நல்ல சான்ஸ்..!!!
இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உயிரிழந்த விக்னேஷின் உடல் உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் போதை ஊசி செலுத்திய விக்னேஷ் உட்பட 12 பேரை அழைத்துச் சென்று பின்னர் விடுவித்து விட்டதாகவும் அதே போல் தான் விக்னேஷின் உறவினர்களை அழைத்து விக்னேஷை அழைத்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில் உறவினர்கள் யாரும் அவரை அழைத்துச் செல்ல முன்வரவில்லை என்றும் கூறினர்.
பின்னர் அவரது நண்பர்கள் விக்னேஷ் அழைத்து சென்று அவர் உடல்நிலை மோசமாக இருந்ததால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த போது அவருக்கு பல்ஸ் இல்லை இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டதாகவும் மற்றபடி காவல்துறையினருக்கும் இந்த உயிரிழப்புக்கும் தொடர்பு இல்லை என்று கூறுகின்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.