சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த 4 வது டி-20 யின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வீரரான சிவம் துபேவுக்கு தலையில் பந்து பட்டதால் அவருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனால் அவர் இங்கிலாந்து அணி பேட்டிங் ஆட வரும் போது மைதானத்தில் இல்லை,அப்போது அவருக்கு பதிலாக மாற்று வீரரை இந்திய அணி அறிவித்தார்கள்,சிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா பங்கு பெற்று பௌலிங் போட்டார்.
சிவம் துபே பேட்டிங் ஆல்ரவுண்டர் என்பதால் அவருக்கு பதிலாக அணியில் மற்றொரு ஆல்ரவுண்டராக இருக்கும் ரமன்தீப்சிங் தான் ஆடி இருக்க வேண்டும்,ஆனால் இந்திய அணி அவ்வாறு செய்யாமல் ஹர்ஷித் ராணாவை ஆட வைத்து,அவர் முக்கியமான கட்டத்தில் 3 விக்கெட்களையும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இதையும் படியுங்க: கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!
இதனால் போட்டி முடித்த பிறகு இங்கிலாந்து அணி கேப்டன் இந்த செயலை வன்மையாக கண்டித்தார்.மேலும் பல முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணி ICC விதிமுறைகளை மீறி போட்டியை வென்றுள்ளது என குற்றம் சாட்டினார்கள்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அஸ்வின் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் இதைபற்றிம் விமர்சித்துள்ளார்,அதில் இந்திய அணி செய்தது IPL போட்டியில் வரும் இம்பாக்ட் ரூல் மாதிரி இருந்தது,சர்வேதச விதிமுறைகளை இந்திய அணி மீறியுள்ளது,மேலும் அணியில் மற்றொரு ஆல்ரவுண்டர் இருக்கும் போது ஒரு வேகப்பந்து வீச்சாளரை ஆட வைத்தது மிகவும் தவறு,வேற ஆல்ரவுண்டர் அணியில் இல்லையென்றால் பரவாயில்லை இருந்தும்,ஹர்ஷித் ராணா ஆடியதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.