Categories: தமிழகம்

ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் இருக்கை ஒதுக்காததால் ஆத்திரம் : தடுப்புகளை உடைத்து பவுன்சர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதம்!

ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் இருக்கை ஒதுக்காததால் ஆத்திரம் : தடுப்புகளை உடைத்து பவுன்சர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதம்!

கோவை கொடிசியா மைதானத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் 40 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் 500 ரூபாய் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில் 2000 தொடங்கி 5000 வரை விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகள் வாங்கியவர்களுக்கு இருக்கை கொடுக்காததால் இசை நிகழ்ச்சியில் பவுன்சர்களுக்கும், ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு ரசிகர்கள் முன்னேறி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் பவுன்சர்கள் ரசிகர்களை பின்னோக்கி தள்ளக்கூடிய காட்சிகள் பதிவாகி உள்ளது. மேலும் இசை நிகழ்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ரசிகர்கள் மேடையின் அருகில் என்று இசை ரசிக்க ஆவலுடன் முன்னேறிச் சென்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.

இசை நிகழ்ச்சியானது மாலை 7 மணி அளவில் தொடங்கியது, முதல் பாடலாக நடிகர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் ஓபனிங் சாங் பாடலான முன்னாள் முன்னாள் வாடா என்ற பாடலை பாடினார்.

பின்னர் இறுதிப் பாடலாக மறக்குமா நெஞ்சம் என்ற பாடலை பாடி நிறைவு செய்தார். மேலும் அரங்கத்தில் பேசிய ஏ ஆர் ரகுமான் மழை வரவில்லை நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே! மேலும் சென்னையில் நிகழ்ச்சி நடக்காமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது, மீண்டும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.

மேலும் லாக்டவுன் இல்லாதது மகிழ்ச்சி எனவும் இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் நடக்குமா என்ற எண்ணம் அப்போது இருந்தது ஆனால் நடக்கிறது எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று பேசினார்.

மேலும் நள்ளிரவு 11 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்றதால் கொடிசியா மைதானம் அருகே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

4 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

6 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

6 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

6 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

7 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

8 hours ago

This website uses cookies.