தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் இன்று மாலை ரயில் மறியல் நடைபெற்றது.
இதில் ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கும் மத்திய அரசை கண்டித்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் தேனி பெரியகுளம் சாலையில் எஸ்பிஐ வங்கி முன்பாக காங்கிரஸ் கட்சியினர் போலீசாரின் தடையை மீறி தேனி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த ரயிலின் முன்பாக தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 130 பெண்கள் 180 ஆண்கள் என 310 பேரை கைது செய்து, வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியினர் தேனி ரயில் நிலையத்திற்கு நுழைய முற்படும் போது தேனி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்தபோது, காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் திடீரென காங்கிரஸ் கட்சியினர் தேனி பெரியகுளம் செல்லும் சாலையில் ரயில்வே கேட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…
இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…
பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ் தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா…
திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.