கொல்லம் – சென்னை விரைவு ரயில் விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில், அதனை காப்பாற்றிய ஊழியருக்கு ரயில்வே நிர்வாகம் பாராட்டியுள்ளது.
கேரளா – கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி தென்காசி வழியாக சென்ற கொல்லம் – சென்னை விரைவு ரயில் செங்கோட்டை ரயில்நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தது. அப்போது, வழக்கம் போல, ரயில் பெட்டிகளை ரயில் பெட்டி பராமரிப்பாளரான ரகுபதி என்பவர் சோதனை செய்தார்.
அப்போது, கொல்லம் – சென்னை விரைவு ரயிலின் எஸ் 3 பெட்டியின் அடிப்பாகத்தில் மிகப்பெரிய அளவிலான விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டுபிடித்து கூறியதால், மிகப்பெரிய அளவிலான விரிசலால் ஏற்படவிருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
ரயில் பெட்டியில் இருந்த விரிசலை கண்டுபிடித்த ரயில்வே ஊழியர் ரகுபதியை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அவருக்கு ரூ. 4 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாதுகாப்பு விருது வழங்கி கௌரவித்தார்.
ஒடிசா ரயில் விபத்துக்குள்ளான நிலையில் கொல்லம் ரயிலில் ஏற்பட்ட விரிசலை உடனடியாக கண்டறிந்ததன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருப்பது அனைவரிடத்திலும் பெருமூச்சை விடச் செய்துள்ளது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.