தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே அரசு பஸ்சில் மேற்கூரையில் ஆங்கங்கே இருந்த ஓட்டையின் வழியாக மழைநீர் உள்ளே வந்தால் இருக்கை முழுவதும் நனைந்து பயணிகள் அமர முடியமால் நின்று கொண்டே பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு பசுவந்தனையில் இருந்து தினமும் இரவில் அரசு பஸ் ஒன்று வருவது வழக்கம். நேற்று இரவும் வழக்கம் போல அந்த அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. பசுவந்தனை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.
இந்நிலையில் அரசு பஸ்சின் மேற்கூரையில் ஆங்கங்கே லேசான ஓட்டைகள் இருந்த காரணத்தினால் மழைநீர் பஸ்சிற்குள் விழுந்துள்ளது. பஸ்சில் மழைநீர் விழுந்து இருக்கைகள் முழுவதும் நனைந்தால் பஸ்சில் பயணித்த பயணிகள் இருக்கையில் அமர முடியமால் நின்று கொண்டே பயணித்து வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அப்போது, அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய நடத்துநர், “மக்கள் யாரும் ஓசியில் வரவில்லை. பலமுறை சொல்லியும் மேற்கூரையில் உள்ள ஓட்டைகளை அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை,” என அந்த அரசு பஸ் நடத்துனர் புலம்பியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வைரலாகும் செல்வராகவனின் இன்ஸ்டா வீடியோ நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் பயங்கர ஹிட் அடித்து வசூல்…
சைந்தவிக்கு எப்போதும் நல்ல மனசுங்க இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் ஜி வி பிரகாஷ்,இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் 'கிங்ஸ்டன்'…
நடிகர் பாண்டியன் இறப்பின் கொடூர பின்னணி தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் பாண்டியன்,இவர்…
சென்னையில் பிரபல சினிமா பட இயக்குநருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதகாரிகள் அதிரடியாக முடக்கியுள்ளனர். ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ்…
இயக்குனராகும் டைட்டானிக் பட ஹீரோயின் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கிய திரைப்படம் டைட்டானிக். ஒரு கப்பலில்…
நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என பிரபல நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில்…
This website uses cookies.