விருதுநகரில் சேதமடைந்த அரசுப் பேருந்தின் உள்பகுதி முழுவதும் மழைநீர் வடிந்ததால் நடத்துநரிடம் டிக்கெட் எடுக்க மறுத்து பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தற்பொழுது கோடைக்காலம் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே போல் விருதுநகர் மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். மாலை தீடீரென்று மழை பெய்ததது. அப்போது, அரசு பேருந்தின் மேல் கூரை முழுவதும் சேதமடைந்து இருந்ததால் மழைநீர் அரசுப் பேருந்தினுள் வடியத் தொடங்கியது.
இதனால் பயணிகள் அனைவரும் மழை நீரில் நனைந்து கொண்டே சீட்டுகளில் உட்கார்ந்து பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டது. இதனால் அரசு பேருந்தில் பயணம் செய்த சில பயணிகள் மழை நீரில் நனைந்து கொண்டே வருவதற்கு எதற்கு டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கூறி நடத்துநரிடம் டிக்கெட் எடுக்க மறுத்தனர். இதனால், பேருந்தினுள் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் இதில் பயணம் செய்த சிறுவன் ஒருவன் அரசு பேருந்துக்குள் பெய்த மழையை ரசித்தவாறு மழையே வா வா என்றும் மழை பெய்கிறது என்றும் மழையில் நனைந்தவாறு சந்தோஷமாக பாடல் பாடினான்.
இதனைக் கண்ட மற்ற பயணிகள் சின்ன பையன் பாடுவதை ரசித்தாலும், டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணிகள் தமிழக அரசு இது போன்று உள்ள அரசுப் பேருந்தை சரி செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் மாற்று பேருந்தை இந்த வழித்தடத்தில் விட வேண்டும் எனவும் புலம்பியவாறே அரசுப் பேருந்தில் பயணித்தனர்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
This website uses cookies.