விருதுநகரில் சேதமடைந்த அரசுப் பேருந்தின் உள்பகுதி முழுவதும் மழைநீர் வடிந்ததால் நடத்துநரிடம் டிக்கெட் எடுக்க மறுத்து பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தற்பொழுது கோடைக்காலம் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே போல் விருதுநகர் மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். மாலை தீடீரென்று மழை பெய்ததது. அப்போது, அரசு பேருந்தின் மேல் கூரை முழுவதும் சேதமடைந்து இருந்ததால் மழைநீர் அரசுப் பேருந்தினுள் வடியத் தொடங்கியது.
இதனால் பயணிகள் அனைவரும் மழை நீரில் நனைந்து கொண்டே சீட்டுகளில் உட்கார்ந்து பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டது. இதனால் அரசு பேருந்தில் பயணம் செய்த சில பயணிகள் மழை நீரில் நனைந்து கொண்டே வருவதற்கு எதற்கு டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கூறி நடத்துநரிடம் டிக்கெட் எடுக்க மறுத்தனர். இதனால், பேருந்தினுள் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் இதில் பயணம் செய்த சிறுவன் ஒருவன் அரசு பேருந்துக்குள் பெய்த மழையை ரசித்தவாறு மழையே வா வா என்றும் மழை பெய்கிறது என்றும் மழையில் நனைந்தவாறு சந்தோஷமாக பாடல் பாடினான்.
இதனைக் கண்ட மற்ற பயணிகள் சின்ன பையன் பாடுவதை ரசித்தாலும், டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணிகள் தமிழக அரசு இது போன்று உள்ள அரசுப் பேருந்தை சரி செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் மாற்று பேருந்தை இந்த வழித்தடத்தில் விட வேண்டும் எனவும் புலம்பியவாறே அரசுப் பேருந்தில் பயணித்தனர்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.