தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட வந்த அமைச்சர் அமைச்சர் கீதா ஜீவனை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தூத்துக்குடியில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக பனிமய மாதா கோவில் பின்பகுதியான செயின்ட் பீட்டர் கோயில் தெருவில் மழைநீர் குளம் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், வீட்டின் உள்ளேயே முடங்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மரப்பலகையை பயன்படுத்தி வீட்டின் உள்ளே இருந்து வெளியே வருவதற்கு தற்காலிக சாய்பு போல் வைத்து வெளியே வருகின்றனர். இந்த மழை நீரானது அங்குள்ள கழிவுநீர் வாய்க்காலில் கலந்துள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் மழை பெய்தாலே, இந்த நிலைதான் பல ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது.
பால் வாங்க வெளியே செல்ல முடியவில்லை தேவாலயத்திற்கு செல்ல முடியவில்லை என்று வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த யாரும் முன் வருவது கிடையாது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இதனிடையே அப்பகுதியை பார்வையிட வந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனை, அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு, இந்த பகுதியில் மழை நீர் தேங்குவதை தடுக்க நிரந்தரமாக தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை கேட்டு அமைச்சர் நிரந்தர தீர்வு எடுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி எடுத்துச் சென்றார்.
தொடர்ந்து அந்த பகுதியை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருந்த மண் மூட்டைகளை அப்புறப்படுத்தி, தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுத்ததோடு ஒரு மணி நேரத்தில் தண்ணீர் முழுமையாக இப்பகுதியில் இருந்த அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்துச் சென்றார்.
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…
பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…
தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.