தமிழகம்

எப்போ.. Oh my God.. ஷாக்கான ரஜினிகாந்த்.. எதற்காக தெரியுமா?

திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது தொடர்பாக ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த், சென்னையில் இருந்து ஜெய்ப்பூருக்கு விமானம் மூலம் செல்கிறார். இதற்காக இன்று (டிச.09) காலை அவர் சென்னை விமான நிலையம் வந்தார்.

அப்போது, திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஷாக்கான ரஜினிகாந்த், “எப்போ?’ எனக் கேட்டார். அதற்கு, சமீபத்தில் பெய்த பயங்கர மழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர் என செய்தியாளர்கள் கூறினர்.

இதனையடுத்து, “ஓ மை காட்..’ என வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து கூலி படத்தின் படப்பிடிப்பிற்காகச் சென்று கொண்டிருப்பதாகவும், கூலி படத்திற்குப் பிறகு தான் அடுத்த படம் பற்றி யோசிக்க வேண்டும் எனவும் ரஜினிகாந்த் கூறினார். தற்போது, இது தொடர்பான கானொலி வைரலாகி வருகிறது.

முன்னதாக, வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் பெரும் மழையால், திருவண்ணாமலை தீப மலையின் அடிவாரப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 குழந்தைகள் மற்றும் ஒரு தம்பதி என 7 பேர் உயிரிழந்து, 2 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அவர்களது உடல்கள் மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிங்க: பிக் பாஸ் பிரபலத்திற்கு புற்றுநோய்…37 வயதில் போராட்ட வாழ்க்கை..!

அதேநேரம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் ‘கூலி’ என்ற படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சமீபத்தில், த.செ.ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வெளியானது. அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Hariharasudhan R

Recent Posts

அக்கட தேசத்து நடிகையுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. வைரலாகும் வில்லங்கமான போட்டோஸ்!

பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…

13 minutes ago

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்- பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த உதவி இயக்குனர்

கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…

16 minutes ago

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

46 minutes ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

1 hour ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

2 hours ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

2 hours ago

This website uses cookies.