ராஜுவ் கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினி, வேலூர் சிறையில் இருக்கும் தனது கணவன் முருகனை சந்தித்து பேசினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரத்தில் ராஜுவ் கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினி அவர் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில், தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், தங்களையும் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
எப்படியும் தனக்கு விடுதலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் நளினி எதிர்பார்த்திருந்தார். பரோலில் இருப்பதால், விருதம்பட்டு காவல்நிலையத்திற்கு நளினி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு, நளினி கையொப்பம் இட்டார்.
பின்னர், தனக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முருகனை சந்திக்க சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு பேசிவிட்டு வந்தார். ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் இவரை விடுதலை செய்ய முடியாது என கூறி தீர்ப்பளித்ததை கேட்டு அதிர்ந்து போனார். பின்னர், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார் நளினி.
இதனிடையே, நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக நளினியின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.