அன்புமணி உடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ராமதாஸ், “பாமக பொதுக் குழுவில் நடந்தது உட்கட்சி விவகாரம் தான். அன்புமணி உடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.
என்னைச் சந்தித்து அன்புமணி பேசினார், பிரச்னை பேசி சரியாகிவிட்டது. பாமக இளைஞரணித் தலைவராக முகுந்தன் தொடர்வார். பாமக பொதுக்குழுவில் அறிவித்த மறுநாளே அவருக்கு நியமனக் கடிதமும் கொடுத்துவிட்டேன். பொதுக்குழுவில் நடந்த பிரச்னை, கட்சியின் வளர்ச்சியைப் பாதிக்காது. என்னை விமர்சித்தால் நான் கோபப்பட மாட்டேன்” எனக் கூறினார்.
முன்னதாக, கடந்த வாரம், புதுச்சேரியில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் அன்புமணிக்கு உதவ முகுந்தனை இளைஞர் அணித் தலைவராக நியமனம் செய்வதாக ராமதாஸ் அறிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அன்புமணி, மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமான ராமதாஸ், தான் ஆரம்பித்த கட்சி இது என்றும், தாம் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார். அப்போது, தொண்டர்கள் சிலர், முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இவர்களுக்கெல்லாம் Scrub Typhus வர வாய்ப்பு.. பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்!
அதற்கு, “இது என் கட்சி” அழுத்தம் திருத்தமாகக் கூறிய ராமதாஸ், விருப்பம் இல்லை என்றால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளலாம் எனக் கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த அன்புமணி, பனையூரில் தான் தனியாக அலுவலகம் தொடங்கி இருப்பதாகக் கூறிவிட்டு மைக்கைத் தூக்கி எறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.