தமிழகம்

கருத்து வேறுபாடுலாம் இல்ல.. ஆனால், அவர்தான் தலைவர்.. அடித்துக்கூறும் ராமதாஸ்!

அன்புமணி உடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ராமதாஸ், “பாமக பொதுக் குழுவில் நடந்தது உட்கட்சி விவகாரம் தான். அன்புமணி உடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.

என்னைச் சந்தித்து அன்புமணி பேசினார், பிரச்னை பேசி சரியாகிவிட்டது. பாமக இளைஞரணித் தலைவராக முகுந்தன் தொடர்வார். பாமக பொதுக்குழுவில் அறிவித்த மறுநாளே அவருக்கு நியமனக் கடிதமும் கொடுத்துவிட்டேன். பொதுக்குழுவில் நடந்த பிரச்னை, கட்சியின் வளர்ச்சியைப் பாதிக்காது. என்னை விமர்சித்தால் நான் கோபப்பட மாட்டேன்” எனக் கூறினார்.

முன்னதாக, கடந்த வாரம், புதுச்சேரியில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் அன்புமணிக்கு உதவ முகுந்தனை இளைஞர் அணித் தலைவராக நியமனம் செய்வதாக ராமதாஸ் அறிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட அன்புமணி, மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமான ராமதாஸ், தான் ஆரம்பித்த கட்சி இது என்றும், தாம் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார். அப்போது, தொண்டர்கள் சிலர், முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இவர்களுக்கெல்லாம் Scrub Typhus வர வாய்ப்பு.. பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்!

அதற்கு, “இது என் கட்சி” அழுத்தம் திருத்தமாகக் கூறிய ராமதாஸ், விருப்பம் இல்லை என்றால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளலாம் எனக் கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த அன்புமணி, பனையூரில் தான் தனியாக அலுவலகம் தொடங்கி இருப்பதாகக் கூறிவிட்டு மைக்கைத் தூக்கி எறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

29 minutes ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

57 minutes ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

1 hour ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

1 hour ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

2 hours ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

2 hours ago

This website uses cookies.