விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சமூகப்பதற்றத்தை உருவாக்கி வன்முறையை நடத்தும் சதித்திட்டத்தை பாஜக தலைமையிலான கும்பல் முயற்சித்து வருகிறது.
இதையும் படியுங்க: குளிக்கும் போது வீடியோ கால்..கணக்கு மாஸ்டர் நடத்திய பாலியல் பாடம் : பள்ளி மாணவி விபரீத முடிவு!
கடந்த இரு நாட்களுக்கு முன் இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி- நெல்வாய் கிராமத்தில் இரு கும்பலுக்கிடையே நடந்த பிரச்சனையில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளது ஒரு கும்பல்.
இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியதாகும். ஆனால்,இச்சம்பவத்தில் சம்பந்தமே இல்லாத விடுதலைச்சிறுத்தைகளை இணைத்து வைத்து அறிக்கை கொடுத்துள்ளனர்.
ராமதாஸ் அவர்களும் அன்புமணி அவர்களும் கலவரத்தை தூண்ட வேண்டும் எனும் சதித்திட்டமே இருவரது நோக்கமாக உள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான்
நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நெற்குந்தியில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை சமூகவிரோதிகள் அவமதிப்பு செய்துள்ளனர்.
சமூகவிரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் தற்போது வாணியம்பாடியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு இப்படியான சமூகவிரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் விடுதலைச்சிறுத்தைகள் தேர்தல் அங்கீகாரம் பெற்று அனைத்து மக்களுக்குமான பேரியக்கமாக வலிமை பெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், அப்பேரியக்கத்தின் மீது அவதூறு பரப்புவதை மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கைவிட்டு பொறுப்புடனும் நேர்மையுடனும் செயல்பட வேண்டும்.
பாமகவுக்குள் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடைபெற்று வரும் அதிகாரப்போரைதிசை திருப்பவே இம்மாதிரியான வன்முறைச்சூழலை உருவாக்குகிறார்கள்.
ஆகவே, தமிழ்நாடு காவல்துறை நேர்மையோடு விசாரித்து உண்மைத்தன்மையை மக்களுக்கு விளக்கவேண்டும்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.