ராமநாதபுரம் ; பரமக்குடியில் நிறுவனத்தில் முறைகேடு செய்த கணக்காளர் வீட்டில் ரூ.2.50 லட்சமும், 210 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.
பரமக்குடி, ஜூலை.11 : பரமக்குடி அருகே உள்ள முத்துச் செல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டீன் (35). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது ரூபாய் 5 கோடி முறைகேடு செய்துள்ளதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து அகஸ்டின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள நகை கடைகளில் நகை வாங்கியதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து, நேற்று பரமக்குடி காமராஜர் தெருவில் உள்ள அகஸ்டின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் மேலக்காவனூர் கிராமத்தில் அகஸ்டின் மனைவியின் தாயார் ஜெயராணி வீட்டிலும் மத்திய குற்ற பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, காமராஜர் தெருவில் உள்ள வீட்டில் ரூ 2.50 லட்சம் மற்றும் 10 பவுன் நகையும் கைப்பற்றப்பட்டது. மேலக்காவனூர் அகஸ்டின் மாமியார் வீட்டில் 200 பவுன் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, அகஸ்டின் தாயார் மற்றும் தம்பியிடமும், மாமியார் ஜெயராணி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தகவல் தெரிந்த அகஸ்டின் தலைமறைவாகியுள்ளார். வேலை பார்த்து நிறுவனத்தில் ரூபாய் 5 கோடியை முறைகேடு செய்து, நகைகளை வாங்கி குவித்த சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.