ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து புதிய பேருந்து வழித்தடத்தை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
பரமக்குடியில் இருந்து நயினார்கோவில், ஆட்டாங்குடி ஆகிய கிராமங்களுக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பேருந்தை சிறிது தூரம் ஓட்டி எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் பரமக்குடி அமைந்துள்ளது.
பரமக்குடியில் இருந்து நயினார்கோவில், ஆட்டாங்குடி கிராமங்களுக்கு நகரப்பேருந்து இயக்க வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து, இன்று பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து சத்திரக்குடி வழியாக நயினார்கோவில் கிராமத்திற்கும், ஆட்டாங்குடி கிராமத்திற்கும் புதிய பேருந்து சேவையை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் கொடியசைத்து, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து சிறிது தூரம் பேருந்தை எம்எல்ஏ முருகேசன் ஓட்டினார். ஆட்டாங்குடி, நயினார்கோவில் கிராமங்களுக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்ததுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
எம்எல்ஏ முருகேசன் பேருந்தை ஒட்டிய போது ஏய் அண்ணன் வண்டி வருது, விலகு விலகு என தொண்டர்கள் கோஷமிட்டதால் சிரிப்பலை ஏற்பட்டது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.