பணியில் இருந்த போலீசாரை தகாத வார்த்தைகளில் பேசி வம்புக்கு இழுத்த நகராட்சி ஊழியரின் வீடியோ சமூகவலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.
தமிழகத்தில் காவல் துறையின் உயர் அதிகாரிகள், காவல் நிலையங்களுக்கு வரும் கைதிகள் மற்றும் பொதுமக்களிடம் கடுமையாக நடக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த கரிகாலன் என்ற போலீசாரை ஒருவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பணியில் இருந்த போலீசார், அவரை இது மருத்துவமனை பகுதி சற்று தள்ளி நின்று தொலைபேசி பேசுமாறு கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், “நீ வந்தாலும் உன்னை அடிப்பேன். என்னை உள்ளே தூக்கிப் போடு. நீ போலீசாக இருந்தால் நான் பயப்பட மாட்டேன். கொன்னுடுவேன் எவனா இருந்தாலும்.. அடி, அடி…,’ என்று கூறி அலப்பறை செய்துள்ளார்.
மிரட்டும் தொனியில் போலீசாரை மிரட்டும் இந்த வீடியோவை அருகிலிருந்தவர்கள் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனிடையே, இதுகுறித்து போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் நகராட்சி ஊழியர் என தெரியவருகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி போலீசார் வருகின்றனர்.
பணியிலிருந்த போலீஸாரை நபர் ஒருவர் அநாகரீகமாக மிரட்டும் தொனியில் பேசிய சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர்.…
யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான்…
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்ட்ர் ஹர்திக் பாண்டியா அடிக்கடி பேசு பொருளாக உலா வருகிறார். தனது மனைவியை விவாகரத்து செய்வதாக…
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர்…
கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின்…
This website uses cookies.