ஜார்கண்டில், இறுதித் தேர்வு நாளைக் கொண்டாடிய மாணவிகளின் மேலாடையைக் கழற்றச் சொன்ன பள்ளி ஆசிரியர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சமீபத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு நிறைவடைந்து உள்ளது. எனவே, அந்தப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள், இதனை ‘பேனா தினமாகக்’ கொண்டாடியுள்ளனர்.
அந்த வகையில், மாணவிகள், சக மாணவிகளின் சட்டையில் அவர்களின் பெயரையும், நினைவுகள் அடங்கிய வாசகங்களையும் எழுதியுள்ளனர். அப்போது, இதனைப் பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் தேவி ஸ்ரீ, கடும் கோபம் அடைந்துள்ளார். மேலும், இதனால் தங்கள் பள்ளியின் பெயர் பாதிக்கப்படும் எனக் கூறி, அவர் மாணவிகளின் சட்டைகளைக் கழற்றி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
இவ்வாறு ஆண் ஆசிரியர்கள் முன்னிலையில், பல மாணவிகளின் சட்டைகளைக் களைய கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் பல மாணவிகள் பள்ளியிலேயே இருந்துள்ளனர். இதனிடையே, தங்களிடம் வேறு சட்டை வைத்திருந்த 20 மாணவிகள் மட்டும், அவர்கள் வைத்திருந்த சட்டையை அணிந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
மேலும், மற்ற 80 மாணவிகளும் மேலாடை இல்லாமல், பிளேசர்கள் மட்டுமே அணிந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர். இவ்வாறு மாணவிகள் வீட்டுக்கு வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ’ஆணாதிக்க ஆழ்மன வக்கிரம்’.. பாலாவை கடுமையாக சாடிய பிரபல இயக்குநர்!
அந்தப் புகாரில், இந்தச் சம்பவம் மாணவிகளை மன ரீதியாக பாதித்துள்ளதாகவும், இது மன ரீதியான வன்கொடுமை என்றும் கூறியுள்ளனர். மேலும், இதனால் சில மாணவிகள் பள்ளிக்கு மீண்டும் செல்வதற்கு பயப்படுவதாகவும் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து, இந்தப் புகாரின் பேரில், போலீசார் தரப்பில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதைனைத் தொடர்ந்து, இந்த புகாரின் மீது விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் உதவி ஆணையர் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.