ராணிப்பேட்டை ; மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததை தட்டிகேட்ட தாயை அடித்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல்வேலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (50). கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், யுவராஜ் (26) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோபி முறையாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு, வீட்டில் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
எனவே, வேலைக்கு செல்லுமாறு மஞ்சுளா கூறியதில், ஆத்திரமடைந்த கோபி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் வீட்டிலிருந்த பொருட்களை உடைத்ததோடு, மகன் யுவராஜின் கண்முன்னே மஞ்சுளாவை கடுமையாக கோபி தாக்கியுள்ளார்.
தாயை அடிப்பதை கண்ட ஆத்திரத்தில் மகன் யுவராஜ் திடீரென தந்தை கோபியை தடுக்க முயன்றதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, பக்கத்தில் இருந்த கல்லை எடுத்து கோபியின் தலையில் போட்டதில், அவர் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணிப்பேட்டை போலீசார், தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன் யுவராஜை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
This website uses cookies.