தமிழகம்

ரசிகர்களின் செயலால் அதிர்ந்த டெல்லி மைதானம்…அவசர அவசரமாக போலீஸ் குவிப்பு..!

12 வருடங்களுக்கு பிறகு ரஞ்சி போட்டியில் விராட் கோலி

சமீபத்தில் இந்திய அணி,ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி,படு தோல்வியை சந்தித்தது.இதனால் இந்திய ரசிகர்கள் கடும் சோகத்தில் இருந்தனர்.

இந்திய அணியில் தொடர்ந்து மோசமான பார்மை வெளிப்படுத்தி வரும் ரோஹித்,கோலி போன்ற முன்னனி வீரர்கள்,உள்ளூர் போட்டியிலும் விளையாட வேண்டும் என பிசிசிஐ அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இதனால்,தற்போது நடந்து வரும் ரஞ்சி கோப்பை தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரர்கள் பலர் ஆடி வருகின்றனர்.இந்த நிலையில் இன்று டெல்லி அருண் ஜெய்ட்லி மைதானத்தில் டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கிடையே ரஞ்சி போட்டி தொடங்கியது.

இதையும் படியுங்க: அவன்‌ திரும்பவும் வந்துட்டான்…எஸ்.ஜே சூர்யாவின் பதிவு… STR ரசிகர்கள் ஹேப்பி…!

இதில் டெல்லி அணிக்காக விராட் கோலி ஆட இருக்கிறார் என்று அறிவிப்பு வந்தவுடன் நேற்று முதல் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.மேலும் 12 வருடங்களுக்கு பிறகு தனது சொந்த மண்ணில் ரஞ்சி போட்டி விளையாட இருப்பதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.இதனால் துணை ராணுவ படையை வர வழைத்தனர்.

இன்று காலை தொடங்கிய போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது,அப்போது கோலி மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருக்கும் போது அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கோலி கோலி….என கோஷங்களை எழுப்பி வந்தனர்,மேலும் அங்கே இருந்த ரசிகர் ஒருவர் போலீஸ் பாதுகாப்பு தடுப்புகளையும் தாண்டி மைதானத்திற்குள் ஓடி,விராட்கோலி காலில் விழுந்து வணங்கினார்.

உடனே அங்கே விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்து மைதானத்திற்கு வெளியே அனுப்பி வைத்தனர்,கோலி ரசிகரை ஏதும் செய்ய வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.ஒரு ரஞ்சி போட்டியை காண வரலாறு காணாத கூட்டம் வந்துள்ளது,இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

Mariselvan

Recent Posts

பல கோடிகளை பெற்று மோசடி செய்த ‘கேடி தம்பதி’… BMW, BENZ கார்கள் வாங்கி சொகுசு வாழ்க்கை!

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.…

14 minutes ago

வீட்டை காலி செய்யும் சிறுத்தை சிவா? கங்குவா படத்தால இப்படி ஒரு நிலைமையா வரணும்?

கங்குவா தோல்வி சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம்…

22 minutes ago

ஜாமீன் வேணுமா? அமைச்சர் பதவி வேணுமா? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு!

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு…

59 minutes ago

கதவை சாத்திக்கொண்ட அமிதாப் பச்சன்! விடாமுயற்சியால் வந்த வினை! இவருக்கா இப்படி ஆகணும்?

படுதோல்வி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.…

2 hours ago

பகல்காமில் நடந்த லியோ படப்பிடிப்பு… தாக்குதல் நடந்த இடத்தில்தான் : ஒளிப்பதிவாளரின் உருக்கம்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…

2 hours ago

கோவையில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; ஆந்திர சுற்றுலாத்துறை அதிர்ச்சி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநில சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேவஸ்தானம்…

2 hours ago

This website uses cookies.