சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நேற்று செவ்வாய் இரவு சுக்காம்பட்டி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் குழந்தை கத்தும் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் சென்று பார்த்த பொழுது பிறந்து சில மணி நேரங்களை ஆன ஆண் குழந்தை கழுத்து மற்றும் கை அறுபட்டு கிடந்தது.
குழந்தையை அப்பகுதியை சேர்ந்த மரியம் பீவி மீட்டு சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக திருப்பத்தூர் டிஎஸ்பி செல்வகுமார் சிங்கம்புணரி ஆய்வாளர் கவிதா உதவி ஆய்வாளர் லெனின் ஆகியோர் தீவிர விசாரணை செய்து வந்தனர் இன்று அதே பகுதியைச் சேர்ந்த அபிநயா (வயது 18) என்ற பெண் இந்த சம்பவத்தை செய்ததாக கண்டுபிடித்தனர்.
அவரை பிடித்து விசாரணை செய்த பொழுது அவர் வீட்டு அருகே வசிக்கும் திருமணமான கொத்தனார் மகேந்திரன் (வயது 42) தன்னை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதனால் தான் கர்ப்பமுற்றதாகவும் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிதான் பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்து வீசி சென்றதாக காவல்துறையினர் விசாரணையில் கூறியதாக தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கொத்தனார் மகேந்திரனை கைது செய்த காவல்துறையினர் 10 மாதத்துக்கு முன்பு 17 வயது சிறுமியான அபிநயாவை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து மகேந்திரனையும் கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
This website uses cookies.