சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நேற்று செவ்வாய் இரவு சுக்காம்பட்டி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் குழந்தை கத்தும் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் சென்று பார்த்த பொழுது பிறந்து சில மணி நேரங்களை ஆன ஆண் குழந்தை கழுத்து மற்றும் கை அறுபட்டு கிடந்தது.
குழந்தையை அப்பகுதியை சேர்ந்த மரியம் பீவி மீட்டு சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக திருப்பத்தூர் டிஎஸ்பி செல்வகுமார் சிங்கம்புணரி ஆய்வாளர் கவிதா உதவி ஆய்வாளர் லெனின் ஆகியோர் தீவிர விசாரணை செய்து வந்தனர் இன்று அதே பகுதியைச் சேர்ந்த அபிநயா (வயது 18) என்ற பெண் இந்த சம்பவத்தை செய்ததாக கண்டுபிடித்தனர்.
அவரை பிடித்து விசாரணை செய்த பொழுது அவர் வீட்டு அருகே வசிக்கும் திருமணமான கொத்தனார் மகேந்திரன் (வயது 42) தன்னை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதனால் தான் கர்ப்பமுற்றதாகவும் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிதான் பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்து வீசி சென்றதாக காவல்துறையினர் விசாரணையில் கூறியதாக தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கொத்தனார் மகேந்திரனை கைது செய்த காவல்துறையினர் 10 மாதத்துக்கு முன்பு 17 வயது சிறுமியான அபிநயாவை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து மகேந்திரனையும் கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
This website uses cookies.