Categories: தமிழகம்

ஆ. ராசா சான்றிதழில் இந்து என்றுதான் உள்ளது… சலுகைகளை அனுபவிக்கும் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் : கொந்தளித்த அர்ஜூன் சம்பத்!!

மதுரை காளவாசல் பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பிரதமர் மோடியின் எட்டாண்டு சாதனை விளக்க புத்தகத்தை வெளியீட்டார்.

தொடர்ந்து அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களை தமிழில் தொகுத்து புத்தகமாக தமிழக மக்கள் அறியும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வு மற்றும் மின் இணைப்பு கட்டணம் உயர்வை கண்டித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றோம்.

மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற தேர்தல் அறிவிப்பு என்ன ஆயிற்று, அறிவிக்கப்படாத மின் வெட்டால் தொழிலாளர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக இலவச திட்டங்கள் மூலம் பொதுமக்கள் வீடுகளில் உள்ள மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பலவும் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. மின் வாரியம் ஊழல் வாரியமாகவும், நிர்வாகம் சீர்கேடுகள் நிறைந்தும் உள்ளது.

ஆவின் பால் பொருள்கள் விலை மற்றும் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆ ராசா இந்து மக்களுக்கு எதிராக அவுதூறு பேசவைத்து திசைதிருப்பும் வேலை செய்து வருகிறது திமுக.

ஆ ராசாவின் சான்றிதழில் இந்து என்றுதான் உள்ளது, இந்து என்ற பெயரில் அரசின் சலுகைகளை பெற்ற அவர் இந்துக்களை இழிவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது அவரை திமுகவில் இருந்து நீக்கி மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாளை பிரதமர் பிறந்த நாள் என்பதை சமூக நீதி நாளாக கொண்டாட உள்ளோம்.

அம்பேத்கர் கொள்கை வழியில் பழங்குடியினர் பட்டியலில் நரிகிறவர்களை சேர்த்து அரசின் உயரிய பதவிகளில் பழங்குடியினர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர். இதன்மூலம் தமிழகத்தில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்து வருகிறது.

தற்போதைய திமுக ஆட்சி வளர்ச்சி திட்டங்களுக்கு தடையாகவும், பிரிவினை வாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் அரசாக உள்ளது. பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் வருகிற தேர்தலில் தமிழகத்தில் குறிப்பாக ராமேஸ்வரத்தில் போட்டியிட கோரிக்கை விடுக்கிறேன்.

வன்முறையை ஏற்படுத்தும் வகையில், திராவிடர் கழகத்தினருக்கு போராட்டம் நடத்த ஸ்ரீ ரங்கத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில் அதிபர் உலக அளவில் முதல் இடம் பெற்றது பெருமை கொள்ளப்பட வேண்டியது. அதானி உண்மையான தேசபக்தி கொண்டவர்கள். மோடிக்கு நெருக்கமானவர்கள் மட்டும் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்பது இடது சாரி கட்சிகளின் பொய் பிரச்சாரம்.

இது அம்பானி, அதானியின் ஆட்சி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம், வெளிநாட்டு கம்பெனிகள் கொள்ளையடிப்பதை தடுத்து உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

5 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

6 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

8 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

9 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

10 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

10 hours ago

This website uses cookies.