கோவையில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திய சம்பவத்தில் சிறுவன் உட்பட விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது, கோவை சரவணம்பட்டி – சேரன் மாநகர் – விளாங்குறிச்சி சாலையில் ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி 30 மூட்டைகளில் இருப்பது தெரிய வந்தது.
மேலும், அந்த வாகனத்தை ஓட்டி வந்த காளப்பட்டியைச் சேர்ந்த சபரி ராஜனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காளப்பட்டியைச் சேர்ந்த பாபு மற்றும் விற்பனையாளர் கோபாலன் என்பவர் உதவியுடன் இந்தக் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அதை கேரளா மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்தது ஒப்புக் கொண்டனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த பாபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய மாருதி கார், ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து மேலும் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
This website uses cookies.