திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு சென்னையிலிருந்து லாரி மூலம் கடத்தப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே தச்சூரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அப்போது, சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கவரைபேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாரியில் இருந்த தஞ்சாவூரை சேர்ந்த சுகுமார் முருகன் ஓட்டுநர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை மாவட்ட குடிமை பொருள் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசின் இலவச ரேஷன் அரிசி மூட்டைகள் தொடர்ந்து திருவள்ளூர் வழியாக போலீசாரின் பல்வேறு சோதனைகளை கடந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.