காஞ்சிபுரம் ; சோமங்கலம் அருகே சுமார் 15 டன் எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் மார்க்கமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் உள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட 15,000 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகள் முழுவதும் ஏரியில் விழுந்து சேதம் அடைந்துள்ளது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற சோமங்கலம் காவல்துறையினர் இந்த ரேஷன் அரிசி எங்கிருந்து எங்கே கடத்தப்படுகின்றது. யார் இந்த லாரியை ஒட்டி வந்தது..? என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
மேலும், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கண்ணில் மண்ணை தூவி விட்டு கடத்தி சென்ற ரேஷன் அரிசி லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.