மதுரை தமிழ்சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக ஆர். பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத் தமிழ் சங்கத்தை மதுரையில் நடத்தி, எட்டாவது வள்ளலாக புரட்சித்தலைவர் திகழ்கிறார். ஆனால் உலகத் தமிழ் சங்கத்தில் புரட்சித்தலைவர் படம் வைக்கப்பட்டிருந்தது.
அந்த படம் தற்போது அகற்றப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் புரட்சித்தலைவரை சித்தப்பா என்று கூறி வருகிறார். தற்போது புரட்சித்தலைவர் படம் அகற்றப்பட்டது அவரின் கவனத்திற்கு வந்ததா?
புரட்சித்தலைவர் என்னை வளர்த்தெடுத்தார் என இன்று வரலாற்றை திருத்தி கூறி வருவதை இன்றைக்கு விவாத பொருளாக உள்ளது. இன்றைக்கு புரட்சித்தலைவர் படத்தை அகற்றி இருப்பது மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, உங்கள் மனசாட்சி கேட்டுக்கொள்கிறதா?
அண்ணாவின் தலைமையில் இயங்கி வந்த திராவிட இயக்கத்தை , தனது திரைப்படங்கள் மூலம் தான் செல்லும் இடங்கள் எல்லாம் இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று பாடுபட்ட புரட்சித்தலைவர் படத்தை அகற்றியது நியாயம் தானா? மதுரையில் கள ஆய்வுக்கு வரும் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வில் முதலில் புரட்சித்தலைவர் எங்கே போனது என்று கேள்வி எழுப்பினால், எம்ஜிஆர் பக்தர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள்.
அம்மாவின் திட்டமும் இரட்டடிப்பு செய்யப்பட்டது போல் புரட்சித்தலைவரின் படமும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…
சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…
சென்னை வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் கே ஜி சிக்னேச்சர் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அமைந்துள்ளது. இந்த…
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி, கடநத் 5ஆம் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டில்…
This website uses cookies.