தமிழகம்

உதயநிதிக்கு ஜால்ரா போடவா? கடுப்பான Ex அமைச்சர்.. மதுரையில் பரபரப்பு பேச்சு!

திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை: மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கண்ணனூர், மு.ஆண்டிப்பட்டி, கருமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “தமிழகத்தில் பூத் கமிட்டியைப் பொறுத்தவரையில் அதிமுக மிகவும் பலமாக இருக்கிறது. மிக அற்புதமாக அதனை எடப்பாடி பழனிசாமி வடிவமைத்தள்ளார். மக்கள் கொலை செய்யப்படுகிகின்றனர், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலரின் உயிர் பறிக்கப்படுகிறது.

போதைப்பொருள் விற்பனை அதிகமாக இருக்கிறது. பிரதான எதிர்கட்சியான அதிமுக, இந்தச் சம்பவங்களை அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறது. இது எதிர்கட்சித் தலைவரின் கடமை. ஆனால், இதைப் பற்றி விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுக்கிறார்.

உள்துறையைக் கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் இதற்கு பதில் அளிக்கவில்லை. ஆனால், கேள்வி கேட்ட முறை சரியில்லை எனக் கூறுகிறார்கள். அப்படி என்றால், வெற்றிலை பாக்கு வைத்து மேளதாளம் சீர் வரிசை வைத்து, உசிலம்பட்டியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் கொலைக்கு காரணம் கூறுங்கள்? என்றா கேட்க முடியும்.

இதையும் படிங்க: பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

பிரதான எதிர்கட்சித் தலைவர் கேள்வி கேட்காமல், ஆளும்கட்சித் தலைவர் ஸ்டாலினா அரசை நோக்கி கேள்வி எழுப்ப முடியும். எதிர்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு முதலமைச்சரால் பதிலளிக்க முடியவில்லை. உதயநிதி பேசும்போது சட்டப்பேரவையில் அதிமுக இருக்கக் கூடாது என திமுக திட்டமிடுகிறது.

ஏனென்றால், குறுக்கே கேள்வி கேட்பார்கள். அதற்கு அவரால் பதில் சொல்ல இயலாது. எனவே, சபைக் காவலரை வைத்து எங்களை வெளியே தூக்கிப்போட்டனர். பட்டத்து இளவரசர் உதயநிதி சிறப்பாகப் பேசுகிறார், அழகாகப் பேசுகிறார் என்று திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களைப் போல் ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை. குற்றம் குறைகளைத் தோலூரித்துக் காட்டவே மக்கள் எங்களை சட்டப்பேரவைக்கு அனுப்பியுள்ளனர்” எனக் கூறினார்.

Hariharasudhan R

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

11 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

12 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

12 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

12 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

13 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

14 hours ago

This website uses cookies.