சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தென்காசி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
தென்காசி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
தென்காசி எம்எல்ஏ பழனி வெற்றியை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தொடர்ந்த வழக்கில், 10 நாட்களில் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ஆணையிட்டிருந்தார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தென்காசி தொகுதியில் பதிவான 2,589 தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று மீண்டும் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.
2021-ஆம் ஆண்டு தேர்தலில் 370 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றார். 2021-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுக்கு 1,609 தபால் வாக்குகள், அதிமுகவுக்கு 674 தபால் வாக்குகள் கிடைத்தது.
இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் தென்காசி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
This website uses cookies.