கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், மது பான பார்களில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜயின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் தமிழக அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் வீடுகள் உள்பட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினரின் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டிலும் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் அமலக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் காசோலைகள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்திருந்த நிலையில் இன்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் வருமான வரித்துறைகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காலை நடைபயணம் மேற்கொண்டு வீடு திரும்பும் போது அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அரசு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் , சோதனை நடப்பது குறித்து முதலில் தகவல் இல்லை என்றும் சோதனை குறித்த தகவல் கிடைத்த பின்னர் நடை பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு வாகனம் மூலம் வீட்டிற்கு வந்ததாகவும் எனக்கு தகவல் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, சட்டபடி சொல்லவும் மாட்டார்கள் என கூறினார்.
மேலும், என்ன நோக்கத்தில் , என்ன தேட வந்துள்ளார்கள் என்று பார்ப்போம் , சோதனை முடியட்டும்எனவும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் எனவும் ஐடி யாக இருந்தாலும் இடி யாக இருந்தாலும் எந்த சோதனை என்றாலும் ஒத்துழைப்பு அளிக்க தயார் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாலும் அதற்கு விளக்கம் அளிக்க தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.