எம்.ஜி.ஆர் படங்களை குடும்பம் குடும்பமாக பார்த்தனர். அதன்பிறகு ரஜினியை பின் தொடர்ந்தனர். இவர்கள் இரண்டு பேருக்கும் அடுத்த படியாக தற்போது சிவகார்த்திகேயனை குடும்ப ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டான் படம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் இவர் கொடுத்த டாக்டர் படமும் செம ஹிட். அடுத்து அடுத்து ரசிகர்களுக்கு தொடர்ந்து விருந்துகளை படைத்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ரஜினி-கமல், விஜய்- அஜித் இவர்களுக்கு பிறகு சிம்பு, சூர்யா, தனுஷ் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் இவர்களையெல்லாம் ஓரங்கட்டி முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சிம்பு மாநாடு படத்தை ரசிகர்கள் வெற்றிப்படமாக ஆக்கினார்கள். ஆனால் அந்த படத்திற்கு பிறகு 6 மாதங்களை கடந்தும் அவர் படம் வெளியாக வில்லை. தனுஷ் தனது சொந்த பிரச்சினை, ஹாலிவுட் என அந்த நிலைமையில் சுற்றிக் கொண்டு தனது மார்க்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவது போல தெரிகிறது.
சூர்யாவும் தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிப்பு பணியில் இறங்குகிறார். மேலும் இவரின் ஜெய்பீம் படத்தை பார்த்து இனிமேல் இந்த மாதிரியான படத்தை தான் கொடுப்பார் என்ற மன நிலைக்கே வந்து விட்டனர் மக்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்க்க ஆசைப்படுகிறார்கள். அதற்கேற்றபடி தான் சிவகார்த்திகேயன் மக்கள் ஆசையை நிறைவேற்றி வருகிறார். மேலும் அஜித் -விஜய் இவர்களுக்கு பிறகு ரசிகர்கள் கொண்டாடும் நடிகர், சிவகார்த்திகேயன் தான் என்று பயில்வான் ரெங்கனாதன் கூறியுள்ளார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.