தஞ்சாவூர்: திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது. அரசுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதுடன் முறைப்படி தெரிவிக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே, நூறு ஆண்டுகள் பழமையான சுதர்சன சபா இயங்கி வருகிறது. இந்த சபாவில் நாடகம் மற்றும் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வந்தது. இப்படி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த, சுதர்சன சபா, இடையில் தி.மு.க பிரமுகரான ஆர்.கே. ராமநாதன் என்பவருக்கு 99 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது.
நாளடைவில், சுதர்சன சபா வளாகத்தில் மதுக்கூடம், ஹோட்டல், செல்போன் விற்பனைகடை, பேக்கரி ஆகியவை தனியாரால் கட்டப்பட்டன. அவைகள் அனைத்தும் உள்வாடகைக்கு விடப்பட்டு வந்துள்ளது. இவை எல்லாம் மாநகராட்சி அனுமதி இன்றி நடந்துள்ளது.
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியம் கட்டப்படவில்லை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, மாநகராட்சிக்கு சொந்தமான 40 ஆயிரத்து 793 சதுர அடி கொண்ட இடம் மீட்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டத்தின் படி, அந்த இடத்தை மாநகராட்சி வசம் கையகப்படுத்தி தண்டோரா போட்டு நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், பொறியாளர்கள் கண்ணதாசன், மகேந்திரன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.