நவ.,28 முதல் திராவிட கூட்டத்திற்கு ரெட் அலர்ட் : பாஜக சுவரொட்டியால் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan27 November 2024, 11:42 am
புதுக்கோட்டை மாவட்ட பாஜக உறுப்பினர் சேர்க்கை மாவட்ட பொறுப்பாளர் சாமி ராஜ்குமார் பெயரில் நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

அதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனிலிருந்து வருவதையொட்டி நவம்பர் 28 முதல் திராவிட கூட்டத்திற்கு ரெட் அலர்ட்.

லண்டனிலிருந்து அண்ணாமலை என்ற புயல் உருவாகி வலுவடைந்து தமிழகத்தில் மையம் கொள்ள இருப்பதால் திராவிட கூட்டம் பாதுகாப்பான பகுதியை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று தனியார் நாளிதழ் போன்று அச்சடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை கிளப்பி உள்ளது.