திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் பெண் காவலர் பிரீத்தி என்பவர் தினந்தோறும் சமூக வலைதளத்தை கண்காணித்து அதில் வரும் ஆபாசமான மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பணி செய்து வருகிறார்.
இந்த நிலையில் Instagram வலைதளத்தை பயன்படுத்தி வரும் பெயர் தெரியாத நபர் பெண்கள் அணியும் உள்ளாடைகளை போட்டுக் கொண்டு திரைப்பட பாடலை திருத்தி பாலியல் சம்பந்தமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், ஆபாசமாகவும் அறுவருக்கதக்க வார்த்தைகளை பயன்படுத்தியும் பல வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இவர் பதிவிடும் பதிவுகள் அனைத்தும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், அந்த வீடியோவை பார்க்கும் நபர்களின் பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் வகையிலும் உள்ளது.
மேலும், இவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்கள் மூலம் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பரப்புவதால் அதனை பார்க்கும் நபர்கள், பெண்களை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கேலி கிண்டலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
இதனால் மேற்குறிப்பிட்ட Instagram ID-யை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்தியும், பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் உடல்ரீதியாகவும், அநாகரிகமாக அறுவருக்கதக்க வகையிலும் வீடியோக்கள் வெளியிட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி மேற்படி பெண் காவலர் பிரீத்தி என்பவர் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க: பிரியங்கா – மணிமேகலை விவகாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்வி : வாய்க்கு வந்தபடி பேசிய CWC புகழ்!
மேலும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள மேல்பட்டி கொத்தமாடி பட்டி குப்பம் அகிலம் என்பவரது மகன் கௌதம் (24) என்பவரை கைது செய்து பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்.
மேலும் அவர் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு பயன்படுத்திய அவரது Instagram ID யினை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.