வேலூர் ; தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்கு அனுப்ப அனுமதி வழங்க 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டார சுகாதார கண்காணிப்பாளர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாநகருக்குட்பட்ட சார்பனா மேடு பகுதியில் செயல்பட்டு வருகிறது (BPR) தனியார் நர்சிங் கல்லூரி. இக்கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் ஆண்டு முடிவில் மூன்று மாத காலம் பயிற்சிக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்ப கல்லூரி தரப்பில் இருந்து விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
அதனை ஆய்வு செய்த வேலூர் வட்டார சுகாதார கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி (57), இதற்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனியார் நர்சிங் கல்லூரியின் முதல்வர் சரண்யா வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று லஞ்சப்பணம் பெறுவதற்காக தனியார் கல்லூரிக்கு வந்த வட்டார சுகாதார கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி (57) கல்லூரி முதல்வர் சரண்யாவிடமிருந்து 10 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றுள்ளார்.
இதனை அடுத்து அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கையும் களவுமாக கைது செய்தும் பத்தாயிரம் லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.