மதுரை : திமிங்கலத்தின் எச்சத்தை காரில் கடத்தி வந்த திமுக முன்னாள் எம்எல்ஏ உறவினர் உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் – சிவகங்கை சாலையில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை பிரிவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக திமுக கொடியுடன் வந்த கார் ஒன்றை மடக்கி சோதனையில் இறங்கினர். அப்போது காரில் 2.5 கிலோ எடையுள்ள திமிங்கல எச்சத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து திமிங்கல எச்சத்தை காரில் கடத்தி திமுக முன்னாள் எம்எல்ஏ உறவினரான லிங்கவாடியை சேர்ந்த அழகு, நந்தம் சீர் வீடு பகுதியை சேர்ந்த பழனிசாமி, நத்தம் பகுதியை சேர்ந்த குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் காரில் கடத்தி வரப்பட்ட திமிங்கல எச்சம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது குறித்து வனத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் மேலூர் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கடத்தப்பட்ட திமிங்கல எச்சம் சுமார் 2 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எச்சம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.