புதுச்சேரி : புதுச்சேரியில் நில தகராறில் இளம் பெண்ணை அவரது உறவினர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி பாகூர் தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (50). இவர் தனது மகன் பிரியதர்ஷன், மகள் பிரியதர்ஷினி உடன் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்கள் செல்வி-சுப்ரமனி தம்பதியினர், ஆதிலட்சுமியின் உறவினர்கள், இந்த இரு குடும்பத்தினருக்கு இடையே வீட்டு மனை பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆதிலட்சுமியின் மகன் நேற்று காலை வீட்டின் அருகே இருக்கும் இரு குடும்பத்திற்கும் சொந்தமான காலி மனையை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை
கண்ட செல்வி மற்றும் அவரது கணவர் சுப்ரமணி ஆதிலட்சுமியின் மகனை ஆபாசமாக திட்டியுள்ளனர்.
பதிலுக்கு ஆதிலட்சுமியும் அவரது மகளும் சுப்ரமணி தம்பதியினரை திட்டியாதக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த தம்பதியினர் தாய் ஆதிலட்சுமி மற்றும் மகள் பிரியதர்ஷினியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போஃனில் வீடியோ எடுத்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
This website uses cookies.