Categories: தமிழகம்

கடல் கடந்து வந்து காதலியை கரம் பிடித்த இளைஞர்… திருமணமான மறுநாளே மணப்பெண்ணை கடத்திய உறவினர்கள்.. காவல்நிலையத்தில் கணவன் கண்ணீர்..!!

திருச்சி ; சிங்கப்பூரில் இருந்து வந்து கரம் பிடித்த காதலியை, திருமணமான மறுநாளே அவரது உறவினர்கள் கடத்தி சென்று விட்டதாக அப்பெண்ணின் கணவர் போலீஸில புகார் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள அழிஞ்சி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கிருபாகரன் (31). இவர் மணப்பாறை அருகே ஆலத்தூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் வேலை பார்த்தபோது, அவருடன் வேலை பார்த்த அழககவுண்டம்பட்டியைச் சேர்ந்த அழகர் என்பவரது மகள் சிவரஞ்சனி (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சிங்கப்பூரில் வேலை கிடைத்ததால் கிருபாகரன் சிங்கப்பூர் சென்றுவிட்டார். சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தாலும் சிவரஞ்சனியுடனான காதல் தொடர்ந்தது. இதற்கிடையே இவர்களது காதல் சிவரஞ்சனி வீட்டிற்கு தெரிய வந்ததால், அவருக்கு வேறு வரன் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து சிவரஞ்சனி சிங்கப்பூரில் இருந்த கிருபாகரனிடம் தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ந்த கிருபாகரன் கடந்த 5ம் தேதி சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்து சிவரஞ்சனியை அழைத்துச் சென்று நேற்று (6ம் தேதி) திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வீரநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

சிவரஞ்சனிக்கு திருமணம் ஆனது பற்றி தகவல் அறிந்த சிவரஞ்சனியின் உறவினர்கள் 15 பேர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் இன்று மாலை கிருபாகரனின் வீட்டிற்குச் சென்று வீட்டில் இருந்த சிவரஞ்சனியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.
தடுக்க வந்தவர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கிருபாகரன் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் உறவினர்களால் கடத்தப்பட்ட தனது காதல் மனைவியை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார். போலீசார் சிவரஞ்சனியை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே கிருபாகரனின் உறவினர்கள் காவல்நிலையத்தின் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காதல் மனைவியை கரம் பிடிக்க சிங்கப்பூரில் இருந்து பறந்து வந்து திருமணம் செய்த நிலையில் திருமணமான மறுநாளே மனைவி அவரது உறவினர்களால் கடத்தப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!

உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…

3 hours ago

‘பேட் கேர்ள்’ டீசர் விவகாரம்…கூகுளுக்கு பறந்த நோட்டீஸ்..நீதிமன்றம் கெடுபிடி.!

படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…

4 hours ago

ரஜினியை சந்தித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்…படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.!

ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…

5 hours ago

சாய் அபயங்கருக்கு அடிச்சது ஜாக்பாட்.. முன்னணி நடிகருடன் இணைகிறார்!

பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…

5 hours ago

சிவாஜியின் வீடு பிரபுக்கு சொந்தம்…ஜப்தி உத்தரவை எதிர்த்து ராம்குமார் மனு.!

வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…

6 hours ago

போதைப்பொருள் வழக்கில் அதிரடி தீர்ப்பு…பெருமூச்சு விட்ட பிரபல நடிகை.!

5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…

7 hours ago

This website uses cookies.