Categories: தமிழகம்

கார்களை பந்தாடிய மதம் பிடித்த ஒற்றை காட்டு யானை : உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்…பொள்ளாச்சி அருகே பயங்கரம்!!

கோவை : பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலை கவியருவி பகுதியில் நவமலை சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை மதம் பிடித்தால் பாதியின் குறுக்கே வந்த கார்களை மறித்து துவம்சம் செய்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள நவமலை மின் வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் அதே பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இவரும் அவரது உறவினர்கள் இரண்டு பேரும் பொள்ளாச்சியில் இருந்து நவமலையில் உள்ள சரவணன் குடியிருப்பிற்கு இரண்டு கார்களில் சென்றுள்ளனர். அப்போது வால்பாதை கவியருவி பகுதியில் இருந்து நவமலை சாலைக்கு செல்லும் போது அங்க சுற்றிதிரிந்த ஒற்றை காட்டு யானை இரண்டு கார்களை மறித்து முட்டி தூக்கி வீசி சாலையில் இருந்து பள்ளத்தில் கவிழ்த்துள்ளது.

மேலும் புதரில் சிக்கிய காரை மூன்று முறை முட்டி உருட்டியது. அப்போது அங்கே ரோந்து பணியில் இருந்து வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அந்த யானை மதம் பிடித்து சுற்றியதாகவும், யானையை வனப்பகுதிக்குள் விரட்டு போது, வனத்துறையினர் கண்முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் கார் வரும் போது வனத்துறை ஊழியர்கள் கார் ஓட்டுநரை பார்த்து கைக்காட்டியதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது

காரில் சிக்கியிருந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஆழியார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சரவணன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் நடத்திய ரோடு ஷோ… கேரவன் மீது ஏறிய தொண்டர்கள் : ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…

16 minutes ago

அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!

சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…

49 minutes ago

கொஞ்சம் கூட யோசிக்கல.. மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்… எதிர்பாரா டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…

2 hours ago

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

17 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

18 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

18 hours ago

This website uses cookies.