Categories: தமிழகம்

ஊருணி ஆக்கிரமிப்பில் இருந்த தென்னை மரங்கள்…ஜேசிபி மூலம் வேரோடு அகற்றிய அதிகாரிகள்: தடுக்க முடியாமல் கதறிய பெண்கள்..!!

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே ஊருணி ஆக்கிரமிப்பில் உள்ள தென்னை மரங்கள் அகற்றப்பட்டு வருவதால் அதை தடுத்து நிறுத்த முடியாமல் பெண்கள் கதறி அழுதனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியாத்தாள் ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, பெரியாத்தாள் ஊருணி பகுதியில் பொதுப்பணி மற்றும் வருவாய்துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மொத்தம் 135 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஊருணியில் 61 ஏக்கரை ஆக்கிரமித்து உள்ளூர் மக்கள் சிலர் விவசாயம் செய்து வருவது தெரியவந்தது. அதனைத் தொர்ந்து கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி தலைமையில், 4 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அங்குள்ள தென்னை மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள தென்னை மரங்கள் அகற்றப்படுவதால், எதுவும் செய்ய முடியாத நிலையில் பெண் ஒருவர் கதறி அழுதாஙர. ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதைவிட, அரசே அவற்றை பராமரிக்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

அதை தவிர்த்து இதுநாள் வரை கஷ்டப்பட்டு வளர்ந்த மரங்களை வேரோடு சாய்ப்பது மனதை உலுக்குவதாக உள்ளது என்று வேதனை தெரிவித்தனர். பல வருடங்களாக பிள்ளை போல் வளர்ந்த மரங்களை வேரோடு அகற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

14 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

14 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

15 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

16 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

16 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

16 hours ago

This website uses cookies.