கரூர் ; குளித்தலை பழைய நெடுஞ்சாலை பேருந்துநிலையம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் சாலையை ஆக்கிரமித்து பெரும்பாலான கடைகள் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக புகார்கள் வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்டிஓ புஷ்பாதேவி தலைமையில் குளித்தலை பேருந்து நிலையம், சுங்ககேட், பெரிய பாலம் பகுதியில் உள்ள டீக்கடை, பழக்கடை, மளிகை கடை, ஹோட்டல் உள்ளிட்ட வணிகக் கடைகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்தவற்றை நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்தனர்.
அதன் பிறகு, நகராட்சி தேர்தல் வந்ததையடுத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கைவிட்டனர். அதனை தொடர்ந்து, முறையாக ஆக்கிரமைப்புகளை அகற்றவில்லை என பல புகார்கள் வந்தது. அதனையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் 10 நாட்களுக்கு முன்னரே அனைத்து வணிக கடைகளுக்கும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று கரூர் – திருச்சி பழைய நெடுஞ்சாலை குளித்தலை பேருந்துநிலையம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளின் முகப்புவாயில்கள், சாக்கடைநீர் செல்லும் வடிகாலை மறைத்துள்ள இடத்தையும் போலீசார் முன்னிலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.