தமிழகம்

திருவண்ணாமலை மண்சரிவு.. 7 பேரின் நிலை என்ன? தொடர் மீட்புப்பணி!

திருவண்ணாமலை மலை அடிவாரப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை: வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் கடந்த இரு நாட்களாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனையடுத்து, புயல் கரையைக் கடந்த நேற்று, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது.

இதனால், பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், சில இடங்களில் சூழ்ந்த மழைநீரில் தத்தளித்த பொதுமக்களை, தீயணைப்புத் துறையினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு வந்தனர். அப்போது, நாய், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் அவர்கள் மீட்டனர்.

அந்த வகையில், திருவண்ணாமலை மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில், இந்தப் பகுதியில் பெய்த தொடர் கனமழையால், மலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு விழுந்ததில், 2 வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன.

இதன் காரணமாக, இந்த வீடுகளில் வசித்து வந்த 7 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மாலையே நடைபெற்றதால், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். ஆனால், அவர்களால் மீட்புப் பணியைத் தொடர முடியவில்லை.

இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதிக்குச் சென்றனர். இருப்பினும், இரவு நேரம் என்பதால், மீட்புப் பணியை தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது. இதனால் இரவு முழுவதும் மீட்புப் பணிகள் துவங்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று அதிகாலையே பேரிடர் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: “இட்லிக்கடை”படத்தின் தனுஷ் கெட்டப் கவனிச்சீங்களா…வைரலாகும் புகைப்படம்..!

மேலும், மோப்ப நாய்கள் உதவி உடன் வீடு இடிபாடுகளில் சிக்கிய சிறுவர்கள் உட்பட 7 பேரை தேடும் பணிகள் தொடங்கியுள்ளன. அதேநேரம், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வீடுகளை மழை வெள்ள நீர் சூழ்ந்ததால் , மீட்புப் படையினர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

6 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

6 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

6 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

6 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

7 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

7 hours ago

This website uses cookies.