Categories: தமிழகம்

பணியில் சேர்ந்து ஒரே ஒரு மாதத்தில் ராஜினாமா : சொந்த ஊருக்கு ரயிலில் வந்த தீயணைப்பு படை வீரர் எடுத்த விபரீத முடிவு… போலீசார் விசாரணை!!

விருதுநகர் : சாத்தூர் ரயில்வே நிலையம் அருகே தீயணைப்பு படை வீரர் ரயில்முன் பாயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வாலிபர் உடல் கிடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் இருந்த உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் சாத்தூர் அருகில் உள்ள சின்னக்காம பட்டியை சேர்ந்த ராஜேஷ் (வயது 22)என்பது தெரிய வந்தது. இவர் கடந்த மாதம் தீயணைப்பு படையில் வேலைக்குச் சேர்ந்து கரூரில் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று அவர் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு தனது சொந்த ஊருக்கு செல்ல சாத்தூருக்கு ரயிலில் வந்துள்ளார். இந்த நிலையில் தனது பேக் மற்றும் பெட்டிகளை ரயில் நிலைய பிளாட்பார்மில் வைத்துவிட்டு சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

பின்னர் அவரது பர்சில் இருந்த முகவரியை வைத்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டனர்

பின்பு தற்கொலை செய்து கொண்ட ராஜேஷின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரயில்வே காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்

மேலும் இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீயணைப்பு படையில் சேர்ந்து ஒரு மாத காலமே ஆன நிலையில் வேலையை ராஜினாமா செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

1 hour ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

1 hour ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

2 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

4 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

4 hours ago

This website uses cookies.