முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மீது ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் சண்முகசுந்தரம். இவர் பெரியகுளம் நகராட்சியில் 24வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் பெரியகுளத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக, இடத்தை சுற்றி குழி தோண்டியதால், அருகே இருந்த ஓய்வு பெற்ற மருத்துவர் திருமலை வீட்டின் அடித்தளம் சேதமடைந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த அடித்தளத்தை சரிசெய்வதற்காக பணியாட்களை மருத்துவர் அனுப்பியுள்ளார். ஆனால், அவர்களை, தன்னுடை இடத்தின் வழியாக செல்ல ஓபிஎஸ் சகோதரர் சண்முகசுந்தரம் அனுமதிக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக ஓபிஎஸ் சகோதரருக்கும், மருத்துவர் திருமலை இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்டட பணிகளை செய்யவிடாமல் தடுக்கும் ஓபிஎஸ் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தென்கரை காவல் நிலையத்தில் மருத்துவர் திருமலை புகார் அளித்துள்ளார். இந்த புகாரை மறுத்த சண்முக சுந்தரம், தன்னுடைய இடத்தை அபகரிக்கும் நோக்கில் மருத்துவர் திருமலை செயல்படுவதாக, தானும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.