முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மீது ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் சண்முகசுந்தரம். இவர் பெரியகுளம் நகராட்சியில் 24வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் பெரியகுளத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக, இடத்தை சுற்றி குழி தோண்டியதால், அருகே இருந்த ஓய்வு பெற்ற மருத்துவர் திருமலை வீட்டின் அடித்தளம் சேதமடைந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த அடித்தளத்தை சரிசெய்வதற்காக பணியாட்களை மருத்துவர் அனுப்பியுள்ளார். ஆனால், அவர்களை, தன்னுடை இடத்தின் வழியாக செல்ல ஓபிஎஸ் சகோதரர் சண்முகசுந்தரம் அனுமதிக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக ஓபிஎஸ் சகோதரருக்கும், மருத்துவர் திருமலை இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்டட பணிகளை செய்யவிடாமல் தடுக்கும் ஓபிஎஸ் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தென்கரை காவல் நிலையத்தில் மருத்துவர் திருமலை புகார் அளித்துள்ளார். இந்த புகாரை மறுத்த சண்முக சுந்தரம், தன்னுடைய இடத்தை அபகரிக்கும் நோக்கில் மருத்துவர் திருமலை செயல்படுவதாக, தானும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.