திருப்பத்தூர் மாவட்டத்தில், லஞ்சப் பணம் தொடர்பாக ஆசிரியரின் காலில் விஏஓ விழுந்தது தொடர்பாக வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருபத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதி, நாட்றம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் சென்றாயன் வட்டத்தைச் சோ்ந்தவர் ரஜினி (32). இவர், தனது வீடு மற்றும் நிலத்துக்குச் செல்வதற்கு பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என சமீபத்தில் திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்து முடிந்த முகாமில் கோரிக்கை மனு அளித்து உள்ளார்.
இந்த மனுவின் பேரில், சொரக்காயல்நத்தம் கிராம நிர்வாக அலுவலா் மாணிக்கம், ரஜினியை அழைத்து விசாரணை மேற்கொண்டு உள்ளார். இதனையடுத்து, அரசு புறம்போக்கு நிலத்தில் பாதை ஏற்படுத்தித் தருவதாக விஏஓ மாணிக்கம் கூறியதாகத் தெரிகிறது.
இதற்காக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் ஒருவரின் முன்னிலையில் ரஜினியிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை விஏஓ மாணிக்கம் பெற்று உள்ளார். ஆனால், கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கம் பாதை ஏற்படுத்தித் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி மாணிக்கம், சொரக்காயல்நத்தம் கிராமத்தில் இருந்து பெருமாபட்டு கிராமத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இது குறித்து அறிந்த ரஜினி, டிசம்பர் 11ஆம் தேதி நாட்றம்பள்ளியில் உள்ள ஆசிரியர் வீட்டுக்கு விஏஓ மாணிக்கத்தை அழைத்துச் சென்று உள்ளார்.
இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேஷன் அருகே நடக்கும் செயலா இது? இளம்பெண் கைது!
அப்போது, லஞ்சமாகப் பெற்ற பணத்தைத் திருப்பி தருமாறும், உடனடியாக தரவில்லை என்றால் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்வதாகவும் மிரட்டியுள்ளாா். இதனால் அச்சம் அடைந்த கிராம நிா்வாக அலுவலர் மாணிக்கம், ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சி உள்ளார்.
தற்போது, ஆசிரியர் காலில் விழுந்து விஏஓ கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இதற்கு விஏஓ மட்டுமல்லாது, பொதுமக்களும் பல்வேறு கேள்விகளையும், கருத்துகளையும் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில், இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.