ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் அண்ணன், தங்கை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சாமி கவுண்டன்பாளையம் பகுதி சேர்ந்தவர் முத்து. சமையல் தொழிலாளியான இவர், கோவில் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த நிலையில், நசியனூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூஜை செய்வதற்காக, தனது தங்கை புஷ்பா உடன் முத்து இருசக்கர வனத்தில் கோவிலுக்கு சென்று விட்டு, கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது, சாமி கவுண்டன் பாளையம் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் சாலையை கடக்க முயன்ற போது, அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் முத்து மற்றும் புஷ்பா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே படுகாயம் அடைந்து இருவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார், உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காரை அதிவேகமாக ஓட்டி வந்த ஆத்தூர் பகுதியை சேர்ந்த சற்குணம் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து பத பதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மேலும், தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க முக்கிய இடங்களில் வாகனங்களை வேகத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கிராம மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.