கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் அதி வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற 4 இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜாய். இவர் தனக்கு சொந்தமான ஆல்டோ காரில் இன்று மாலை காட்டாத்துறை பகுதிக்கு சென்றுள்ளார். காரை நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பாபு என்பவர் ஓட்டி சென்ற நிலையில், காரானது நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அழகியமண்டபம் பகுதியில் அதி வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறமாக கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதோடு, மீண்டும் வேகமாக சாலையின் நடுவே சென்று நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சாலையோரம் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிக்கப்பட்ட நிலையில், காரில் இருந்த ஜாய் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதி வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற இருசக்கர வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.