கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் அதி வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற 4 இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜாய். இவர் தனக்கு சொந்தமான ஆல்டோ காரில் இன்று மாலை காட்டாத்துறை பகுதிக்கு சென்றுள்ளார். காரை நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பாபு என்பவர் ஓட்டி சென்ற நிலையில், காரானது நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அழகியமண்டபம் பகுதியில் அதி வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறமாக கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதோடு, மீண்டும் வேகமாக சாலையின் நடுவே சென்று நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சாலையோரம் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிக்கப்பட்ட நிலையில், காரில் இருந்த ஜாய் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதி வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற இருசக்கர வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.