Categories: தமிழகம்

கனமழையால் காணாமல் போன சாலை : காட்டாற்று வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிப்பு… ஆக்ரோஷமாக வெள்ளம் பாயும் வீடியோ!!

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் மல்லியம்மன் துர்கம் கோவில் அருகே வெள்ளநீர் சாலையை கடந்து செல்கிறது. இதனால் சத்தியமங்கலம் கடம்பூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

சத்தியமங்கலத்திலிருந்து கடம்பூர் செல்லும் மலைப்பாதையில் கெம்பநாயக்கன்பாளையம் சோதனைச்சாவடியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் மிகவும் பிரசித்தி பெற்ற மல்லியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

கடம்பூர் மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் இக்கோவிலின் அருகாமையில் உள்ள பாறைகள் வழியாக மழைக் காலங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து அருவியாக கொட்டுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கடம்பூர் மலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மல்லியம்மன் கோவில் அருகே காட்டாற்று வெள்ளம் பாறைகளை தழுவியவாறு அருவியாக கொட்டி சாலையின் குறுக்கே பாய்ந்தோடுகிறது. இதனால் சத்தியமங்கலம் கடம்பூர் சாலையில் அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சாலையில் வெள்ளநீர் வடிந்தவுடன் அனைத்து வாகனங்களும் செல்லத் துவங்கியன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

75 வயது நடிகருக்கு மனைவியாக நடித்த 30 வயது நடிகை.. ஒப்புக்கொண்டது ஏன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…

2 minutes ago

சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!

நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…

39 minutes ago

சிறுவன் அன்புக்கரசின் அன்புக்கு கட்டுப்பட்ட தமிழக அரசு.. இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…

55 minutes ago

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

17 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

17 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

18 hours ago

This website uses cookies.