சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் மல்லியம்மன் துர்கம் கோவில் அருகே வெள்ளநீர் சாலையை கடந்து செல்கிறது. இதனால் சத்தியமங்கலம் கடம்பூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
சத்தியமங்கலத்திலிருந்து கடம்பூர் செல்லும் மலைப்பாதையில் கெம்பநாயக்கன்பாளையம் சோதனைச்சாவடியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் மிகவும் பிரசித்தி பெற்ற மல்லியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
கடம்பூர் மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் இக்கோவிலின் அருகாமையில் உள்ள பாறைகள் வழியாக மழைக் காலங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து அருவியாக கொட்டுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கடம்பூர் மலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மல்லியம்மன் கோவில் அருகே காட்டாற்று வெள்ளம் பாறைகளை தழுவியவாறு அருவியாக கொட்டி சாலையின் குறுக்கே பாய்ந்தோடுகிறது. இதனால் சத்தியமங்கலம் கடம்பூர் சாலையில் அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சாலையில் வெள்ளநீர் வடிந்தவுடன் அனைத்து வாகனங்களும் செல்லத் துவங்கியன.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.