கோவை : காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கைக்கடிகாரத்தை வயது முதிர்ந்த தம்பதி திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், செல்போன், பழக்கடை, பேக்கரிகள் உள்ள பல்வேறு கடைகள் உள்ளன. அங்குள்ள, மலைகொழுந்து என்பவரது செல்போன் உதிரிப்பாக கடையின், முன்புறம் கைக் கடிகாரங்களை விற்பனைக்காக வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் கடையின் அருகே பேருந்துக்காக நின்றிருந்து வயதான தம்பதி ஒருவர் நீண்ட நேரமாக அங்கேயே நின்றுள்ளனர். கடையின் உரிமையாளர் அருகே உள்ள மற்றொரு கடைக்கு சென்ற நேரத்தில், கண்ணிமைக்கும் பொழுதில் அங்கிருந்த கடிகாரத்தை முதியவர் திருடி பெண்ணிடம் கொடுத்துள்ளார்.
அந்த பெண் அதை பையில் போட்டுக்கொண்ட பின்பு அங்கிருந்து சென்றனர். இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
அதை பார்த்த அங்கிருந்த மற்றொரு நபர், வயதான தம்பதியை பிடித்து சோதனை செய்த போது, அவர்கள் பையில் கடிகாரம் இருந்த நிலையில் இருவரையும் காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். அந்த வயதான தம்பதிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, பின்னர் எச்சரித்து அனுப்பினர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.