ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றிய கொள்ளையர்கள்.. சேஸிங் செய்ய ஜீப்பில் விரட்டிய காவலர்கள் : நொடியில் நடந்த விபத்து!!
கோவை அருகே நள்ளிரவில் பைக்கில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர்களை போலீசார் துரத்திச் சென்ற போது போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்தார்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த தென்னம்பாளையம் பிரிவு அருகே அவிநாசி சாலையில் நள்ளிரவில் சூலூர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது, நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் தங்களது (ஜீப்) வாகனத்தில் அந்த பைக்கை துரத்திச் சென்றனர்.
போலீசார் துரத்துவதை பார்த்து அச்சமடைந்த பைக்கில் வந்த மர்ம நபர்கள் பைக் மற்றும் கையில் இருந்த உடமைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த நிலையில் அதிவேகமாக வந்த காவல்துறை வாகனம் சாலையில் கிடந்த பைக் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் வலது பக்கமாக திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காவல் ஆய்வாளர் மாதையனுக்கு முழங்கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சக காவலர்கள் காவல் ஆய்வாளரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் ஆய்வாளரை பரிசோதித்த மருத்துவர்கள் கை மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளனர்.
இதனிடையே மர்ம நபர்கள் விட்டுச் சென்ற பைக் மற்றும் உடமைகளை கைப்பற்றி போலீசார் சோதனையிட்டபோது, அதில் பட்டா கத்திகள், இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.
இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் வழிப்பறி அல்லது வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட முயற்சித்திருக்க கூடும் என சந்தேகித்துள்ள போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 2 தனிப் படைகள் அமைத்து தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.