நாமக்கல்: இரவுநேரத்தில் கதவுகளை திறந்து வைத்து தூங்கும் பொதுமக்களின் வீடுகளை குறிவைத்து டவுசர் கொள்ளையர்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டியில் கேபிள் ஆபரேட்டர் வேலு என்பவரது வீட்டில் கடந்த 5ம் தேதி இரவு 9 சவரன் நகை கொள்ளை போன நிலையில், அடுத்தநாள் 6ம் தேதி இரவும், அதேப் பகுதியில் உள்ள மகாலட்சுமி நகரில் வசித்து வரும் வினோத் – நதியா தம்பதியினர் வீட்டில் 4 சவரன் நகையும், ஆரியமாலா வீட்டில் 3 சவரன் நகையும் கொள்ளை போனது.
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் திறந்திருக்கும் வீட்டிற்குள் புகுந்து, எந்தவித சத்தமும் போடாமல் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் இல்லாமல் மிரட்டி நகைகளை அடுத்தடுத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தபோது, டவுசர் அணிந்த கொள்ளையர்கள் முகமூடி அணிந்து கொண்டு நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்தச்சம்பவங்கள் குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருவதுடன், பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வீட்டை திறந்து வைத்து தூங்க வேண்டாம் எனவும் எச்சரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரன் தேஜஸ்வியிடம் கேட்ட போது, விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.