Categories: தமிழகம்

தொழிலதிபர் வீட்டில் கைவரிசை…நகை, பணம் அபேஸ்: மிளகாய் பொடி தூவி சென்ற கொள்ளையர்களால் மக்கள் அச்சம்..!!

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சியின் போது மிளகாய்பொடி தூவி சென்ற கொள்ளையர்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திகணேஷ்(45). தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

வசந்தம் நகரில் வசித்துவரும் சக்தி கணேசின் மனைவி மற்றும் குடும்பத்தார் வெளியூர் சென்றதால் வீட்டில் தனியாக இருந்த சக்தி கணேஷ் நேற்றிரவு காந்திநகரில் உள்ள தனது உறவிணர் வீட்டில் தங்கிவிட்டு மீண்டும் இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டை சுற்றி மிளகாய் பொடி போடப்பட்டிருப்பதை கண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக்திகணேஷ் உடனடியாக அருப்புக்கோட்டை நகர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் அப்பகுதியில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் வீட்டில் நகை பணம் ஏதும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது தெரியவந்தது.மேலும் அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளில்லாத வீட்டை நோட்டம் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி சென்ற சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

விஜய் தான் BEST..சூர்யா WORST.. ரசிகருக்கு ஜோதிகா சுடச் சுட பதிலடி.!

ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…

11 minutes ago

கார்த்தி கேரியரில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் படம்… எதிர்பார்ப்பை எகிற வைத்த B4U!

நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…

22 minutes ago

உள்ளூரிலேயே விலை போகாதவர் PK… திமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு!

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…

50 minutes ago

என் தங்கச்சி எங்க போறாங்கனு தெரியும்.. நாதகவின் அடுத்த நகர்வு? சீமான் பதில்!

நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…

1 hour ago

வந்த வேகத்தில் ஜாக்பாட்… ஒரே சீரியலால் அத்தனை நடிகைகளையும் ஓரங்கட்டிய பிரபலம்!

சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…

2 hours ago

25 ஆண்டுகளுக்கு பின் கம் பேக் கொடுக்கும் ஷாலினி…மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா.!

குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…

2 hours ago

This website uses cookies.